3067. |
விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி |
|
மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே. 5 |
5.
பொ-ரை: ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும்
திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின்
திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக்
காட்டி, தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும்.
சிவலோகம் செல்லும் நெறிகாட்டும். முக்தி நெறி காட்டும்.
கு-ரை:
விண்-சுவர்க்கலோகம்:-போகபூமி. மதி தீண்டும்-சந்திர
மண்டலத்தை யளாவிய, தேவன்குடி.
|