3074. பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
  விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ வடியரே.      1

     1. பொ-ரை: பெண் யானைகள் பின்தொடர, பெரிய
தும்பிக்கையுடைய ஆண்யானையானது, விடியற்காலையிலேயே
குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற
நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை
யன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது?

     கு-ரை: பெரும் கை(ம்)மா - தலைவனாகிய துதிக்கையை
யுடைய யானை. மலர்தழீஇ - மலர்களை ஏந்திக்கொண்டு. கடி -
வாசனை, உலாம் - உலாவும்.