3125. |
சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை |
|
நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 8 |
8.
பொ-ரை: தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான
இராவணனின் வலிமையான பெரியதோள்களும், தலைகளும்
நெரியுமாறு அடர்த்த சிவபெருமான், அடர்த்தியான மென்மை
வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டு, அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந்
தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
கு-ரை:
சரிவு இலா - தளர்தல் இல்லாத. தோடலை - தோள்
+ தலை. நெரிவில்லார் அடர்த்தார்-நெரித்தலால் முற்ற அடர்த்தவர்.
நெறி குழலுக்குவரும் அடை. "வணர்வார் குழல்" எனவருவதும் அது.
|