3181. |
சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம் |
|
உந்துமா முகலியின் கரையினி லுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே. 1 |
1.
பொ-ரை: சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய
மரங்களை அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி
என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்றும் வீசும் சோலைகள்
வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எம் தந்தையாகிய
காளத்திநாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம்
மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
சந்தம் - சந்தனமரம். ஆர் - ஆத்தி. சாதி -
சாதிக்காய் மரம்.
உந்தும்
- அலையால் தள்ளி வரும். மந்தம் - தென்றல்
காற்று. மல்குவளன் - வளம் மிகுந்த; காளத்தி.
|