3220. தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
       தரிப்பொணாதநற் சேவடி
எங்கணாயக னேத்தொழிந்திடுக்
     கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
     வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்றிரு
     வாலவாயர னிற்கவே.               10

     10. பொ-ரை: சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய,
நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய
சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல
நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப்
பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள்
நிற்பதால் எளியேன் அல்லேன்.

     கு-ரை:ஏத்து ஒழிந்து - ஏத்துலை நீங்கி, ஏத்தாமல்,
இடுக்கு மடுத்துத் துன்புறுத்தலையே பொருந்தி. வாய்த்தவம்.....
பழிக்கும் - நூல் வழியில்லாமலே ஒரு பொய்த்தவம் நாட்டி
அறிஞரைப் பழிக்கின்ற. புலம் - அறிவு. புலவோர் - அறிஞர்,
அங்கதர்.