3256. |
மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் |
|
தேனி
டங்கொளுந் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே. 2 |
2.
பொ-ரை: மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான்
நீண்ட சிவந்த சடைமுடியின்மீது, தேன் துளிக்கும் கொன்றை
மாலையை அணிந்தவர். நறுமணம் திகழும் குளிர்ந்த
வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் இந்த
உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.
கு-ரை:
வரம்புகளில் மலர்ந்த தாமரை முதலிய மலர்களின்
மணம் பரவுவதால் கானிடம் கொளும் தண்வயல் காழி என்றார்.
கான் - வாசனை. மானிடங்கொண்டு - மானை இடப்பக்கத்தில்
ஏந்தி. ஊன் - உடம்பு. இடங்கொண்டு என்பது. "எந்தையே ஈசா
உடலிடங் கொண்டாய்" என்ற திருவாசகத்திலும் காண்க.
|