3306. |
மாலும் நான்முக னும்மறி யாநெறி |
|
ஆல வாயுறை
யும்மண்ண லேபணி
மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
சால வாதுசெ யத்திரு யுள்ளமே. 9 |
9.
பொ-ரை: திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த்
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே!
இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை
அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும்
சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
கு-ரை:
சால - முற்றிலும். வாது செயத் திருவுள்ளமே
பணிப்பீராயின் என்பது கருத்து.
|