3320.
|
காத லாகிக்
கசிந்துகண் ணீர்மல்கி |
|
ஓது வார்தமை
நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. 1 |
1.
பொ-ரை: உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர்
பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக்
கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக
விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின்
திருநாமம் நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும்.
கு-ரை:
காதல் - அன்பு. மல்கி - மிக்கு. ஓதுதல் -
சொல்லுதல். இங்கே செபித்தல் என்னும் பொருளில் வந்தது.
|