3342. சிட்ட னேதிரு வாலவாய் மேவிய
  அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே.     4

    4. பொ-ரை: நீதிநெறி தவறாதவரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் அட்டமூர்த்தி வடிவானவரே! என்னை அஞ்சேல்
என்று அருள்புரிவீராக! கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற
வைத்த நெருப்பு கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச்
சென்று பற்றுவதாக.

     கு-ரை: சிட்டன் - நீதிமுறை வழுவாதவன். பட்டிமன் -
கல்வியறிவு உடைய அரசன்.