3344. |
தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் |
|
அஞ்ச
லென்றரு ளாலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே. 6 |
6.
பொ-ரை: திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே!
அபயம் என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த
அடியேனையும் அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக. வஞ்சகம்
செய்யும் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு,
பஞ்சவன், தென்னன் முதலிய பெயர்களையுடைய பாண்டிய
மன்னனைச் சென்று பற்றுவதாக.
கு-ரை:
தஞ்சம் - (தண் + து + அம்) அபயம். அஞ்சல் -
அஞ்சாதே. வஞ்சம் - (வல் + து + அம்) கொடுமை. பஞ்சவன்;
தென்னவன்; பாண்டியனைக் குறித்த பெயர்கள்.
|