3345. செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய்
  அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லாரமண் கைய ரிடுங்கனல்
பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே.     7

     7. பொ-ரை: சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை
வாகனமாக உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய
கண்களையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று
அருள்செய்வீராக! இருள்மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு
இட்ட நெருப்பானது, உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய
மன்னனைச் சென்று பற்றுவதாக.

     கு-ரை: அங்கணன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர்.
“அங்கணன் கையிலை காக்கும்” (காஞ்சிப் புராணம்.) கங்குலார் -
இருள் போன்றவர். மீளவும் சைவம் திரும்புகின்றமையின் “பங்கம்
இல் தென்னன்” என்றார். (தி.12 பெரியபுராணம்) பங்கம் - குற்றம்.