3359.
|
தேற்றமில்
வினைத்தொழிற் றேரருஞ் சமணரும் |
|
போற்றிசைத்து
நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார்
கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய்
நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே. 10 |
10.
பொ-ரை: தெளிவில்லாத செயல்களைச் செய்யும் புத்தரும்,
சமணரும் உம் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து புண்ணியங்களைத்
தேடிக்கொள்ளாதவராயினர். காலனை மார்க்கண்டேயர்க்காக
உதைத்த திருவடிகளை உடையவரே! கூடல் ஆலவாயில்
வீற்றிருந்தருளும் இறைவரே! உலகனைத்திற்கும் தலைவராக விளங்கி
உயிர்கட்கு எல்லா நன்மையும் தருபவர் நீவிர் அல்லிரோ?
கு-ரை:
நால்திசை - அன்மொழித் தொகையாய் உலகம்
என்னும் பொருளிலும், மூர்த்தி என்பது கடவுள் என்னும்
பொருளிலும் வந்தன. உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே.
(தி.6.ப.38.பா.1)
|