3364. |
விண்ணினண்ணு புல்கிய வீரமாய |
|
மால்விடைச்
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து
கையினான்
அண்ணல்கண்ணொர் மூன்றினா னானைக்காவு
கைதொழ
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்று
மில்லையே. 4 |
4.
பொ-ரை: வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது
திருமால் இடபமாகத் தாங்கினான். இறைவன் திருவெண்ணீறு
அணிந்தவன். சூலமேந்திய கையினன். மூன்று கண்களையுடைய
மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை
எதுவும் இல்லை.
கு-ரை:
விண்ணின் நண்ணு - வான்வழியாக வருகின்ற.
புல்கிய வீரம் ஆய - பொருந்திய வீரத்தையுடைய, மால்விடை.
கைதொழ வல்லவர்க்கும் - (எண்ணும் வண்ணம்) தியானிக்குமாறு
வல்லவர்க்கும் தீங்கு எதுவும் நேராது என்பது இப்பாடலின் இறுதிப்
பகுதியின் பொருள்.
|