3384. |
விரையார் கொன்றையினாய் விடமுண்ட |
|
மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமைநங்கையொர்
பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி
யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென
தாதரவே. 1 |
1.
பொ-ரை: நறுமணம் கமழும் கொன்றைமலரை
அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால்
பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு
மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய
கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே!
உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது.
கு-ரை:
விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில்
பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக்
கொள்வது; ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது
எழுத்துப் போலி.
|