3404.
|
உரைதரு
நான்மறையோர் புகழ்ந் தேத்தவொண் |
|
மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலி கின்ற
பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல வணி சம்பந்தன்
பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் மெதிர் கொள்ள
விரும்புவரே. 11 |
11.
பொ-ரை: சிவபெருமானது பெருமையை உரைக்கும்
நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து
போற்ற, அழகிய உமாதேவியோடு மலைபோன்று உறுதிப் பொருளாக
விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற பிரமாபுரத்தில்
அருளாட்சியைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களை நறுமணம் கமழும்
விண்ணுலகத்துத் தேவர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்ல
விரும்புவர்.
கு-ரை:
பத்தும் - பத்துப்பாசுரங்களும். (ஆகுபெயர்) விரை
தரு - கற்பகப்பூமணம் வீசுகின்ற, (விண்ணுலகம்) விரும்புவர் -
விரும்பியடைவர்.
|