3623. |
மந்தமுர
வங்கடல் வளங்கெழுவு |
|
காழிபதி
மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன
வேவுசிவ னின்னருளினால்
சந்தமிவை தண்டமிழி னின்னிசை
யெனப்பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில்
வார்களுயர் வானுலகமே. 11 |
11.
பொ-ரை: மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க
சீகாழிப்பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த
ஞானசம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு
அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம்
விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடு
பவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர்.
கு-ரை:
மந்தம் முரவம் - மந்தமான ஓசையையுடைய. கடல்
வளம் கெழுவு - கடலினால் பெறத்தகும் வளங்கள் பொருந்திய.
காழிபதி - சீகாழி யென்னும் தலத்தில். மன்னு - நிலைபெற்ற, கவுணி
- கவுணிய கோத்திரத்தினர். (கவுணிபந்தன் என இயைக்க
இருபெயரொட்டுப் பண்புத் தாகை.) (வெந்த) பொடி நீறு -
பொடியாகிய நீறு (நீறணியும் சிவன் என்க). சந்தம் இவை - சந்த
இசையோடு கூடிய இப்பாடல்கள். தண்தமிழின் இன்னிசை - குளிர்ந்த
தமிழ் மொழியின் இனிய இசைப்பாடல்கள். என - என்று. பரவு
பாடல் - துதித்துப் பாடிய பாடல். உயர் வான் உலகம் - சிவலோகத்தில். பயில்வர்
- வாழ்வார்கள்.
|