3681. |
நீறுடைய
மார்பிலிம வான்மகளொர் |
|
பாகநிலை
செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ
காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவி
னின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னானுறைவ
தவளிவண லூரே. 3 |
3.
பொ-ரை: சிவபெருமான் திருநீறணிந்த தம் திருமார்பில்
இமவான் மகளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு
அர்த்தநாரி என்னும் அழகிய கோலத்தில் இடபவாகனத்தில்
வீற்றிருப்பவர். சுடுகாட்டில் இரவில் நடனம் ஆடுபவர். கங்கையை
நீண்ட சடையில் தாங்கியவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது
திருஅவளிவணல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
இமவான் மகள் - உமாதேவியாரை. ஓர்பாகம்,
நிலைசெய்து- பிரியாமற்கொண்டு, கூறுடைய வேடமொடுகூடி
அழகாயதொரு கோலம் - ஒருபாதி ஆணாகிய தோற்றத்தோடு கூடி
அழகாகியகோலம். ஏறு - எவற்றினும் சிறக்க உடைய (வ) ரேனும்.
இடுகாடு - இடுகாட்டில், (இரவில் நின்று நடம் ஆடும். ஆறு உடைய) வார்
- நெடிய சடையினான். உறைவது - தங்குவது,
அவளிவள்நல்லூரே. இக்கோலம் ஏற உடைமை, இடுகாட்டில் இரவில்
நின்று நடமாடுதற்கு ஏற்றதன்றாயினும், "இன்ன தன்மையனென்று
அறியொண்ணா இறைவன்" ஆகலின், ஆயிற்றென்க. ஏற உடையர் -
ஏறுடையர் என்றாயது. "தொட்டனைத்தூறும்" என்ற
திருக்குறளிற்போல, ஏறுடையர். வார்சடையினான் - என வந்தது
ஒருமை பன்மை மயக்கம்; பன்மை - உயர்வுபற்றியது.
|