3702 |
கொக்குடை
யிறகொடு பிறையொடு குளிர்சடை |
|
முடியினர்
அக்குடை வடமுமொ ரரவமு மலரரை
மிசையினில்
திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை
மகளொடும்
புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ்
புறவமே. 2 |
2.
பொ-ரை: கொக்கின் இறகோடும், பிறைச்சந்திரனோடும்
கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான். எலும்பு மாலை
அணிந்தவர். பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர். திசைகளையே
ஆடையாகக் கொண்ட உருவினர். அவர் மலைமகளான
உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின்
நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கொக்கு உடை இறகு - கொக்குருவோடுவந்த
அசுரனைக் கொன்று அதற்கறிகுறியாய் அவ்விறகைத் தலையில்
அணிந்தனர். "கொக்கினிற கதணிந்து நின்றாடி தென்கூடல்" என்னும்
திருக்கோவையாரிலும் வருவதறிக. இறகோடும். பிறையோடு்ம்
குளிர்கின்ற சடைமுடியினர். அக்குஉடைவடமும் - அக்குப்பாசியால்
ஆகிய மாலையும். ஒரு அரவமும், மலர் - விளங்கும். அரைமிசை -
இடுப்பில் திக்கு உடை மருவிய உருவினர் - திகம்பரர் (நிர்வாண
வடிவினர்; பிட்சாடன அவதாரம்.) மலை மகளொடும் உறைவது
புறவமே.
|