3834. |
நீர்மல்கு
தொல்புகழ் நெல்வெணெய் மேவிய |
|
ஊர்மல்கி
யுறையவல் லீரே
ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே. 4 |
4.
பொ-ரை: நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில்
நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே! அவ்வாறு அவ்வூரில்
நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது
தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள்
இயல்பாகும்.
கு-ரை:
நீர்மல்கு - நீர்வளம்பொருந்திய, நெல்வெண்ணெய்
மேவிய ஊர் - நெல்வெண்ணெயென்னும் பெயர் பொருந்திய ஊரில்.
மல்கி - நிலைபெற்று, உறையவல்லீர் - வாழ்தலையுடையீர், உம்மை
எப்பொழுதும் ஒழியாது நினைத்திருத்தல் உலகில் உயர்ந்த
புகழையுடைய சிவஞானிகள் இயல்பாம். இருமை வகைதெரிந்
தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (குறள் - 23)
என்புழியும் இவ்வாறு வருதல் காண்க.
|