3848. செறிபொழி றழுவிய சிறுகுடி மேவிய
  வெறிகமழ் சடைமுடி யீரே
வெறிகமழ் சடைமுடி யீருை விரும்பிமெய்ந்
நெறியுணர் வோருயர்ந்தோரே.               7

     7. பொ-ரை: அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி
என்னும் திருத்தலத்தல் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம்
கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே! நறுமணம் கமழும்
சடைமுடியுடைய உம்மை விரும்பி, அடைவதற்குரிய நெறிகளில்
சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர்.

     கு-ரை: செறி - அடர்ந்த பொழில். வெறி - வாசனை.
மெய்ந்நெறி - உண்மையான மார்க்கம். சன்மார்க்கம் சகமார்க்கம்
சற்புத்திர மார்க்கம் தாசமார்க்கம் என்று சங்கரனையடையும்
நன்மார்க்கம் நான்கு எனச் சித்தியாரிற் குறித்தவை. உயர்ந்தோர்
அவற்றில் உயர்ந்த சன்மார்க்க நெறியில் நிற்போர் ஆவர்.