3850. |
செருவரை
வயலமர் சிறுகுடி மேவிய |
|
இருவர
யசைவுசெய் தீரே
இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவிணை யொடுதுய ரிலரே. 9 |
9.
பொ-ரை: வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு
கொண்ட திருமால், பிரமன் இவர்களை வருத்தியவருமான
சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி
வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன் விளைவால்
உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர்.
கு-ரை:
இருவரை - பிரம விட்டுணுக்களை. இருவர் தொகைக்
குறிப்பு. அசைவு - வருத்தம். அருவினை என்பது ஆகாமிய சஞ்சித
கன்மங்களை துயர் என்றது பிராரத்த வினையை. அதனையிலர்
என்றது, சிவனும் இவன் செய்தியெலாம் என் செய்தியென்றும்
செய்ததெனக் கிவனக்குச் செய்த தென்றும் கொள்வன்
ஆகையினால். (சித்தியார் சூ.10.1).
|