3995. தக்கன்வேள்வியைச் சாடினார்மணி
       தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை
     நாடொறுங் கெடுமே.                  6

     6. பொ-ரை: சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர்.
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான
சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு
மேல்வினை உண்டாகாது.

     கு-ரை: சாடினார் - மோதி அழித்தார். மணி தொக்க மாளிகை
- இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை. நக்கனார் -
ஆடையில்லாதவர், தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து.