3995. |
தக்கன்வேள்வியைச்
சாடினார்மணி |
|
தொக்கமாளிகை
மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை
நாடொறுங் கெடுமே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர்.
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான
சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு
மேல்வினை உண்டாகாது.
கு-ரை:
சாடினார் - மோதி அழித்தார். மணி தொக்க மாளிகை
- இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை. நக்கனார் -
ஆடையில்லாதவர், தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து.
|