4000. |
சந்தமார்பொழின்
மிழலையீசனைச் |
|
சண்பைஞானசம்
பந்தன்வாய்நவில்
பந்தமார்தமிழ் பத்தும்வல்லவர்
பத்தரா குவரே. 11 |
11.
பொ-ரை: சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானைப் போற்றி, சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர்
அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை
ஓதவல்லவர்கள் பத்தர்கள் ஆவர்.
கு-ரை:
சந்தம் ஆர் பொழில் - சந்தன மரங்கள் நிறைந்த
சோலை. பந்தம் ஆர் தமிழ் - கேட்டார்ப் பிணிக்கும் தகையவாயின
தமிழ்.
|