4001.
|
பரசுபாணியர்
பாடல்வீணையர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார்
இவர்தன்மை யறிவாரார். 1 |
1.
பொ-ரை: சிவபெருமான் மழுப்படையைக் கையில்
ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை
எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார்.
கு-ரை:
பரசு பாணியர் - பரசு என்னும் ஆயுதத்தைக் கையில்
ஏந்தியவர். பாடல் வீணையர் - பாடுதலுக்குரிய கருவியாகிய
வீணையை உடையவர் என்றது ஒன்றோடொன்று மாறுபட்ட
தன்மையை உடையவர். ஆகையினால் இவர் தன்மை அறிவார் யார்
என்றார்.
|