4003. பவளமேனியர் திகழுநீற்றினர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               3

     3. பொ-ரை: சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த
மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை
அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது
என்பதை யாவரே அறிவார்?

     கு-ரை: பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை
உடையவர். “வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே”
(தி.4.ப.112. பா.1.); “பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே
திருவுடம்பு” (தி.9 திருவிசைப்பா.95.); “பவளம்போல் மேனியில் பால்
வெண்ணீறு” (தி.4. ப.81. பா.4.) என்பன காண்க.