4003. |
பவளமேனியர்
திகழுநீற்றினர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 3 |
3.
பொ-ரை: சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த
மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை
அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது
என்பதை யாவரே அறிவார்?
கு-ரை:
பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை
உடையவர். வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே
(தி.4.ப.112. பா.1.); பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே
திருவுடம்பு (தி.9 திருவிசைப்பா.95.); பவளம்போல் மேனியில் பால்
வெண்ணீறு (தி.4. ப.81. பா.4.) என்பன காண்க.
|