4004. பண்ணில்யாழினர் பயிலுமொந்தையர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               4

     4. பொ-ரை: இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர்.
மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம்
பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர்.
இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்?

     கு-ரை: பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை
உடையவர். ஏழன் உருபு, மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை
மயக்கம். மொந்தை - ஒருவகை வாத்தியம்.