4004. |
பண்ணில்யாழினர்
பயிலுமொந்தையர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 4 |
4.
பொ-ரை: இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர்.
மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம்
பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர்.
இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்?
கு-ரை:
பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை
உடையவர். ஏழன் உருபு, மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை
மயக்கம். மொந்தை - ஒருவகை வாத்தியம்.
|