4013. |
சதிமிக
வந்த சலந்தரனே |
|
தடிசிர
நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையா
லமர்ந்தன ரும்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்டவி ரும்பரனே
வேணு புரத்தை விரும்பரனே. 2 |
2.
பொ-ரை: வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும்
அசுரனே. அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய
அரன். கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால்
சலந்தனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர். சந்திர
மண்டலத்தை அளாவிய மேருமலை, கையிலேந்திய வில்லாம்.
பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர். விதிக்கப்பட்ட
அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய
மேலான கடவுளே. வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளும் அரனே!
கு-ரை:
சதி - வஞ்சனை. சலந்தரன் - சலந்தரனை. தடிசிரம் -
தலையைவெட்டுவதற்குரிய. சலந்தரனே - வஞ்சகத்தையுடையவனே!
வஞ்சகமாவது காலால் சக்கரம்போல் கோடுகிழித்து அதை எடுக்கச்
சொல்லியது. அதிர் - கண்டார் நடுங்கத் தக்க. திகிரிப் படையால் -
அச்சலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தால். உம்பர் - தேவர்கள்.
துதிப்பு - துதித்தல். அமர்ந்தனர் - மகிழ்ச்சியுற்றனர். அடை - முதல்
நிலைத் தொழிற்பெயர். மதிதவழ் வெற்பது கைச்சிலையே - சந்திர
மண்டலத்தை அளாவிய மேரு மலை, கையிலேந்திய
வில்லாம்.மரு(வு)விடம்
ஏற்பது கைச்சிலையே - பொருந்திய நஞ்சை
உணவாக ஏற்பதில் வெறுத்திலீர். விதியினில் - விதித்த முறையில்
உலகர் ஒழுகுவதில். இட்ட(ம்) - விருப்பத்தை உடைய. இரும் -
பெரிய. பரனே - மேலான கடவுளே! இட்டம் + இரும்பரன் -
மவ்வீறொற்றொழிந்து உயிரீறு ஒத்தது. (நன்நூல். 219.) இட்டு அவிரும்
எனலே தகும். வேணுபுரத்தை விரும்பு அரனே - வேணுபுரத்தை
விரும்புகின்ற சிவபெருமானே.
|