4073. |
புற்றில்வா
ளரவு மாமையும் பூண்ட |
|
புனிதனார்
பனிமலர்க் கொன்றை
பற்றிவான் மதியஞ் சடையிடை வைத்த
படிறனார் பயின்றினி திருக்கை
செற்றுவன் றிரைக ளொன்றொடொன் றோடிச்
செயிர்த்துவண் சங்கொடு வங்கங்
கற்றுறை வரைகள் கரைக்குவந் துரைக்குங்
கழுமல நகரென லாமே. 6 |
6.
பொ-ரை: புற்றில் வாழுந் தன்மையுடைய ஒளிமிக்க
பாம்பையும், ஆமையோட்டையும் ஆபரணமாகப் பூண்ட புனிதரும்,
குளிர்ச்சி பொருந்திய கொன்றை மலருடன், வானத்திலுள்ள
சந்திரனையும் சடையில் வைத்த எம் உள்ளம் கவர் கள்வருமான
சிவபெருமான் பயின்று இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வலிய
அலைகள் ஒன்றோடொன்று மோதிப் பொரும் கடலானது
வளமையான சங்குகளோடு, கப்பல்களையும் கொண்டு வந்து
மலைகள் போலக் கரை வந்து சாரச்செய்யும் திருக்கழுமலநகர்
எனக் கூறலாம்.
கு-ரை:
படிறனார் - வஞ்சகர். காலில் தேய்த்த
மதியையேதலையில் வைத்தமையின்
படிறனார் என்றார். (படிறு -
வேறு கருத்து உண்மை).
|