4148. |
மறியார்
கரத்தெந்தை யம்மா துமையோடும் |
|
பிறியாத
பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. 1 |
1.
பொ-ரை: மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான் உமையம்மையோடு
பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை
உடைய இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய
மலரில் துயிலும், திருவிடைவாய் என்பர். பிரியாத என்பது எதுகை
நோக்கி வல்லெழுத்தாகத் திரிந்தது.
|