தொடக்கம் |
07. திருப்புகலி - காந்தாரபஞ்சமம்
|
|
|
2867. |
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல்
ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான்
அன்றே! 1 |
|
உரை
|
|
|
|
|
2868. |
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின்
மிசைப்
பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும்
பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர்,
காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே! 2 |
|
உரை
|
|
|
|
|
2869. |
கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக்
கடைக்கண்டானும்,
மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே! 3 |
|
உரை
|
|
|
|
|
2870. |
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு
ஆகவே
கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே. 4 |
|
உரை
|
|
|
|
|
2871. |
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி
தகர்த்தானும்,
நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர்,
கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே! 5 |
|
உரை
|
|
|
|
|
2872. |
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர்
தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே! 6 |
|
உரை
|
|
|
|
|
2873. |
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ்
பாலன்மேல்
வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை
போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர்,
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே! 7 |
|
உரை
|
|
|
|
|
2874. |
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்)
இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான்
அன்றே! 8 |
|
உரை
|
|
|
|
|
2875. |
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று
இவர் புக்குழித்
தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும்
புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர்,
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே! 9 |
|
உரை
|
|
|
|
|
2876. |
பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப்
பேணாதது ஓர்,
தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்-
புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர்,
வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த
மணவாளனே. 10 |
|
உரை
|
|
|
|
|
2877. |
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான்,
புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே. 11 |
|
உரை
|
|
|
|