தொடக்கம் |
10. திருஇராமேச்சுரம் - காந்தாரபஞ்சமம்
|
|
|
2900. |
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி,
உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து
ஆட்சியே. 1 |
|
உரை
|
|
|
|
|
2901. |
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே. 2 |
|
உரை
|
|
|
|
|
2902. |
மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால்
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்,
ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே. 3 |
|
உரை
|
|
|
|
|
2903. |
உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு
வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான்
அல்லனே! 4 |
|
உரை
|
|
|
|
|
2904. |
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல
ஊர்தொறும்,
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி
பேருமே. 5 |
|
உரை
|
|
|
|
|
2905. |
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி
செய்தவன்,
பணை இலங்கும் முடிபத்து இறுத்த, பழி போக்கிய
இணை இலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்,
துணை இலி தூ மலர்ப்பாதம் ஏத்த, துயர் நீங்குமே. 6 |
|
உரை
|
|
|
|
|
2906. |
சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள்,
பலதீயன,
முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட,
“இனி அருள் நல்கிடு!” என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்,
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே! 7 |
|
உரை
|
|
|
|
|
2907. |
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான் தன்
பெயர் சாய் கெட,
அரு வரையால் அடர்த்து, அன்று நல்கி, அயன் மால் எனும்
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே! 8 |
|
உரை
|
|
|
|
|
2908. |
சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார்
வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால்,
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள்
ஆகவே! 10 |
|
உரை
|
|
|
|
|
2909. |
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்,
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால்,
அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை,
அல்லலே. 11 |
|
உரை
|
|
|
|