தொடக்கம் |
16. திருக்கொள்ளிக்காடு - காந்தாரபஞ்சமம்
|
|
|
2965. |
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று,
இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்;
உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும்,
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே. 1 |
|
உரை
|
|
|
|
|
2966. |
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்,
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே. 2 |
|
உரை
|
|
|
|
|
2967. |
அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம்
வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே;
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே. 3 |
|
உரை
|
|
|
|
|
2968. |
பா வணம் மேவு சொல்மாலையின், பல
நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்;
ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும்,
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே. 4 |
|
உரை
|
|
|
|
|
2969. |
வார் அணி வனமுலை மங்கையாளொடும்
சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்;
நார் அணி சிலைதனால் நணுகலார் எயில்
கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே. 5 |
|
உரை
|
|
|
|
|
2970. |
பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும்
மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்;
வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே. 6 |
|
உரை
|
|
|
|
|
2971. |
இறை உறு வரி வளை இசைகள் பாடிட,
அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்;
சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே. 7 |
|
உரை
|
|
|
|
|
2972. |
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால்,
அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப்
படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும்,
கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே. 8 |
|
உரை
|
|
|
|
|
2973. |
தேடினார், அயன் முடி, மாலும் சேவடி;
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்;
பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும்
கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே. 9 |
|
உரை
|
|
|
|
|
2974. |
நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள்,
சாக்கியர்
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல;
பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும்
கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே. 10 |
|
உரை
|
|
|
|
|
2975. |
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன்,
குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச்
சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக்
கற்றவர், கழல் அடி காண வல்லரே. 11 |
|
உரை
|
|
|
|