தொடக்கம் |
20. திருப்பூவணம் - காந்தாரபஞ்சமம்
|
|
|
3009. |
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே. 1 |
|
உரை
|
|
|
|
|
3010. |
வான் அணி மதி புல்கு சென்னி, வண்டொடு
தேன் அணி பொழில்-திருப் பூவணத்து உறை,
ஆன நல் அருமறை அங்கம் ஓதிய,
ஞானனை அடி தொழ, நன்மை ஆகுமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3011. |
வெந்துயர், உறு பிணி, வினைகள், தீர்வது
ஓர்
புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை,
அந்தி வெண்பிறையினோடு ஆறு சூடிய,
நந்தியை அடி தொழ, நன்மை ஆகுமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3012. |
வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடிப்
பூசனை, பொழில் திகழ் பூவணத்து உறை
ஈசனை, மலர் புனைந்து ஏத்துவார் வினை
நாசனை, அடி தொழ, நன்மை ஆகுமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3013. |
குருந்தொடு, மாதவி, கோங்கு, மல்லிகை,
பொருந்திய பொழில்-திருப் பூவணத்து உறை,
அருந் திறல் அவுணர்தம் அரணம் மூன்று எய்த,
பெருந்தகை அடி தொழ, பீடை இல்லையே. 5 |
|
உரை
|
|
|
|
|
3014. |
வெறி கமழ் புன்னை, பொன்ஞாழல், விம்மிய
பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
கிறிபடும் உடையினன், கேடு இல் கொள்கையன்,
நறு மலர் அடி தொழ, நன்மை ஆகுமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3015. |
பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்,
பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
மறை மல்கு பாடலன், மாது ஒர் கூறினன்,
அறை மல்கு கழல் தொழ, அல்லல் இல்லையே. 7 |
|
உரை
|
|
|
|
|
3016. |
வரை தனை எடுத்த வல் அரக்கன் நீள
விரல்தனில் அடர்த்தவன், வெள்ளை நீற்றினன்,
பொரு புனல் புடை அணி பூவணம் தனைப்
பரவிய அடியவர்க்கு இல்லை, பாவமே. 8 |
|
உரை
|
|
|
|
|
3017. |
நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்;
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,
ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3018. |
மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,
குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3019. |
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே. 11 |
|
உரை
|
|
|
|