21. திருக்கருக்குடி - காந்தாரபஞ்சமம்
 
3020. நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!     1
உரை
   
3021. வேதியன், விடை உடை விமலன், ஒன்னலர்
மூதெயில் எரி எழ முனிந்த முக்கணன்,
காது இயல் குழையினன், கருக்குடி அமர்
ஆதியை, அடி தொழ அல்லல் இல்லையே.     2
உரை
   
3022. மஞ்சு உறு பொழில் வளம் மலி கருக்கு
நஞ்சு உறு திருமிடறு உடைய நாதனார்
அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே,
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ?     3
உரை
   
3023. ஊன் உடைப் பிறவியை அறுக்க உன்னுவீா
கான் இடை ஆடலான் பயில் கருக்குடிக்
கோன் உயர் கோயிலை வணங்கி, வைகலும்,
வானவர் தொழு கழல் வாழ்த்தி, வாழ்மினே!     4
உரை
   
3024. சூடுவர், சடை இடைக் கங்கை நங்கையை;
கூடுவர், உலகு இடை ஐயம் கொண்டு; ஒலி
பாடுவர், இசை; பறை கொட்ட, நட்டி
ஆடுவர்; கருக்குடி அண்ணல் வண்ணமே!     5
உரை
   
3025. இன்பு உடையார், இசை வீணை; பூண் அரா,
என்பு, உடையார்; எழில் மேனிமேல் எரி
முன்பு உடையார்; முதல் ஏத்தும் அன்பருக்கு
அன்பு உடையார் கருக்குடி எம் அண்ணலே!     6
உரை
   
3026. காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!     7
உரை
   
3027. எறிகடல் புடை தழுவு இலங்கை மன்னனை
முறிபட வரை இடை அடர்த்த மூர்த்தியார்
கறை படு பொழில் மதி தவழ், கருக்கு
அறிவொடு தொழுமவர் ஆள்வர், நன்மையே.     8
உரை
   
3028. பூ மனும் திசை முகன் தானும், பொற்பு அமர்
வாமனன், அறிகிலா வண்ணம் ஓங்கு எரி-
ஆம் என உயர்ந்தவன் அணி கருக்கு
நா மனனினில் வர நினைதல் நன்மையே.     9
உரை
   
3029. சாக்கியர், சமண் படு கையர், பொய்ம்மொழி
ஆக்கிய உரை கொளேல்! அருந் திரு(ந்) நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடிப்
பூக் கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்மினே!     10
உரை
   
3030. கானலில் விரைமலர் விம்மு காழியான்,
வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி
ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே.     11
உரை