தொடக்கம் |
23. திருவிற்கோலம் - காந்தாரபஞ்சமம்
|
|
|
3042. |
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது
ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே. 1 |
|
உரை
|
|
|
|
|
3043. |
சிற்றிடை உமை ஒருபங்கன்; அங்கையில்
உற்றது ஓர் எரியினன்; ஒரு சரத்தினால்,
வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அறச்
செற்றவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3044. |
ஐயன்; நல் அதிசயன்; அயன் விண்ணோர்
தொழும்
மை அணி கண்டன்; ஆர் வண்ணம், வண்ணவான்;
பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்,
செய்யவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3045. |
விதைத்தவன், முனிவருக்கு அறம்; முன் காலனை
உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தரப்
புதைத்தவன்; நெடு நகர்ப்-புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3046. |
முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான்,
கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்,
அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை
சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே. 5 |
|
உரை
|
|
|
|
|
3047. |
தொகுத்தவன், அருமறை அங்கம்; ஆகமம்
வகுத்தவன்; வளர் பொழில் கூகம் மேவினான்;
மிகுத்தவன்; மிகுத்தவர் புரங்கள் வெந்து அறச்
செகுத்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3048. |
விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்
சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3049. |
திரி தரு புரம் எரிசெய்த சேவகன்,
வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்,
அரியொடு பிரமனது ஆற்றலால் உருத்
தெரியலன், உறைவு இடம் திரு விற்கோலமே. 9 |
|
உரை
|
|
|
|
|
3050. |
சீர்மை இல் சமணொடு, சீவரக் கையர்
நீர்மை இல் உரைகள் கொள்ளாது, நேசர்க்கு
பார் மலி பெருஞ் செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையினான் இடம் திரு விற்கோலமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3051. |
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை,
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே. 11 |
|
உரை
|
|
|
|