தொடக்கம் |
24. திருக்கழுமலம் - கொல்லி
|
|
|
3052. |
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே! 1 |
|
உரை
|
|
|
|
|
3053. |
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது
எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே! 2 |
|
உரை
|
|
|
|
|
3054. |
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து
உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே! 3 |
|
உரை
|
|
|
|
|
3055. |
“அயர்வு உளோம்!” என்று நீ அசைவு ஒழி,
நெஞ்சமே!
நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே! 4 |
|
உரை
|
|
|
|
|
3056. |
“அடைவு இலோம்” என்று நீ அயர்வு ஒழி,
நெஞ்சமே!
விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே! 5 |
|
உரை
|
|
|
|
|
3057. |
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைப
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே! 6 |
|
உரை
|
|
|
|
|
3058. |
குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே!
நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்
பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே! 7 |
|
உரை
|
|
|
|
|
3059. |
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே! 8 |
|
உரை
|
|
|
|
|
3060. |
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய்,
அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே! 9 |
|
உரை
|
|
|
|
|
3061. |
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள்
தம்
ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!
கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே! 10 |
|
உரை
|
|
|
|
|
3062. |
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே. 11 |
|
உரை
|
|
|
|