தொடக்கம் |
26. திருக்கானப்பேர் - கொல்லி
|
|
|
3074. |
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர்
தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே? 1 |
|
உரை
|
|
|
|
|
3075. |
நுண் இடைப் பேர் அல்குல் நூபுர மெல் அடிப்
பெண்ணின் நல்லாளை ஓர் பாகமாப் பேணினான்,
கண் உடை நெற்றியான், கருதிய கானப்பேர்
விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3076. |
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டு இனம்
காவிவாய்ப் பண் செயும் கானப்பேர் அண்ணலை,
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவி, வாய்ப் பெய்து நின்று ஆட்டுவார், தொண்டரே. 3 |
|
உரை
|
|
|
|
|
3077. |
நிறை உடை நெஞ்சுளும், நீருளும், பூவுளும்,
பறை உடை முழவுளும், பலியுளும், பாட்டுளும்,
கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறை உடையவர்க்கு அலால், களைகிலார், குற்றமே. 4 |
|
உரை
|
|
|
|
|
3078. |
ஏனப் பூண் மார்பின்மேல் என்பு பூண்டு,
ஈறு இலா
ஞானப் பேர் ஆயிரம் பேரினான், நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
வானப் பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3079. |
பள்ளமே படர்சடைப் பால் படப் பாய்ந்த
நீர்
வெள்ளமே தாங்கினான், வெண்மதி சூடினான்-
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும், என் உள்ளமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3080. |
மான மா மடப்பிடி வன் கையால் அலகு இடக்
கானம் ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்,
ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்,
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே. 7 |
|
உரை
|
|
|
|
|
3081. |
வாளினான், வேலினான், மால்வரை எடுத்த
திண்-
தோளினான், நெடு முடி தொலையவே ஊன்றிய
தாளினான், கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையைப் பெறுவரே. 8 |
|
உரை
|
|
|
|
|
3082. |
சிலையினால் முப்புரம் தீ எழச் செற்றவன்,
நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்,
கலையின் ஆர் புறவில்-தேன் கமழ் தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே 9 |
|
உரை
|
|
|
|
|
3083. |
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து,
உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயன் இலை, பாவிகாள்
மறித் தலை மடப்பிடி வளர் இளங் கொழுங் கொடி
கறித்து, எழு கானப்பேர் கைதொழல் கருமமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3084. |
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம்,
பாவமே. 11 |
|
உரை
|
|
|
|