தொடக்கம் |
31. திருமயேந்திரப்பள்ளி - கொல்லி
|
|
|
3129. |
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே! 1 |
|
உரை
|
|
|
|
|
3130. |
கொண்டல் சேர் கோபுரம், கோலம் ஆர்
மாளிகை,
கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்,
வண்டு உலாம் பொழில், அணி மயேந்திரப்பள்
செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணிமினே! 2 |
|
உரை
|
|
|
|
|
3131. |
கோங்கு இள வேங்கையும், கொழு மலர்ப்புன்னையும்,
தாங்கு தேன் கொன்றையும், தகு மலர்க்குரவமும்,
மாங் கரும்பும், வயல் மயேந்திரப்பள்
ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணிமினே! 3 |
|
உரை
|
|
|
|
|
3132. |
வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
சங்கம் ஆர் ஒலி, அகில் தரு புகை கமழ்தரும்
மங்கை ஓர் பங்கினன், மயேந்திரப்பள்
எங்கள் நாயகன் தனது இணை அடி பணிமினே! 4 |
|
உரை
|
|
|
|
|
3133. |
நித்திலத் தொகை பல நிரை தரு மலர் எனச்
சித்திரப் புணரி சேர்த்திட, திகழ்ந்து இருந்தவன்,
மைத் திகழ் கண்டன், நல் மயேந்திரப்பள்
கைத்தலம் மழுவனைக் கண்டு, அடி பணிமினே! 5 |
|
உரை
|
|
|
|
|
3134. |
சந்திரன், கதிரவன், தகு புகழ் அயனொடும்,
இந்திரன், வழிபட இருந்த எம் இறையவன்-
மந்திரமறை வளர் மயேந்திரப்பள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே! 6 |
|
உரை
|
|
|
|
|
3135. |
சடை முடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடம் நவில் புரிவினன், நறவு அணி மலரொடு
படர்சடை மதியினன், மயேந்திரப்பள்
அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்மினே! 7 |
|
உரை
|
|
|
|
|
3136. |
சிரம் ஒருபதும் உடைச் செரு வலி அரக்கனைக்
கரம் இருபதும் இறக் கனவரை அடர்த்தவன்,
மரவு அமர் பூம்பொழில் மயேந்திரப்பள்
அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்மினே! 8 |
|
உரை
|
|
|
|
|
3137. |
நாக(அ)ணைத் துயில்பவன், நலம் மிகு மலரவன்,
ஆக(அ)ணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்;
மாகு அணைந்து அலர்பொழில் மயேந்திரப்பள்
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்மினே! 9 |
|
உரை
|
|
|
|
|
3138. |
உடை துறந்தவர்களும், உடை துவர் உடையரும்,
படு பழி உடையவர் பகர்வன விடுமின், நீர்
மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்
இடம் உடை ஈசனை இணை அடி பணிமினே! 10 |
|
உரை
|
|
|
|
|
3139. |
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
“நம் பரம் இது” என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே. 11 |
|
உரை
|
|
|
|