தொடக்கம் |
39. திருஆலவாய் - கொல்லி
|
|
|
3211. |
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு
மா பெருந்தேவி! கேள்
“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு
எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 1 |
|
உரை
|
|
|
|
|
3212. |
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத
பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு
பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 2 |
|
உரை
|
|
|
|
|
3213. |
அத் தகு பொருள் உண்டும் இல்லையும் என்று
நின்றவர்க்கு
அச்சமா,
ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து, எழுந்த கவிப்
பெயர்ச்
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து, சனங்கள் வெட்கு உற நக்கம்
ஏய்,
சித்திரர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 3 |
|
உரை
|
|
|
|
|
3214. |
சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும்,
கருமை சேர்
கந்துசேனனும், கனகசேனனும், முதல் அது ஆகிய பெயர்
கொளா
மந்தி போல்-திரிந்து, ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன்
அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 4 |
|
உரை
|
|
|
|
|
3215. |
கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது
ஓர் எலியின்
தொழில்,
பாட்டு மெய் சொலி, பக்கமே செலும் எக்கர்தங்களை, பல்
அறம்
காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை, கசிவு ஒன்று
இலாச்
சேட்டை கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.
5 |
|
உரை
|
|
|
|
|
3216. |
கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும்,
குமண மா
சுனகநந்தியும், குனகநந்தியும், திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியர், “மது ஒழிந்து அவமே தவம் புரிவோம்” எனும்
சினகருக்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே.
6 |
|
உரை
|
|
|
|
|
3217. |
“பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்; பரிவு
ஒன்று இலம்(ம்)!”
என வாசகம்
மந்தணம் பல பேசி, மாசு அறு சீர்மை இன்றி அநாயமே,
அந்தணம்(ம்), அருகந்தணம், மதிபுத்தணம், மதிசிந்தணச்
சிந்தணர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 7 |
|
உரை
|
|
|
|
|
3218. |
“மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற அரக்கனார்
மிகை செற்ற
தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு,
குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 8 |
|
உரை
|
|
|
|
|
3219. |
பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்)
அடி
போற்றிலார்
சாம் அவத்தையினார்கள் போல்-தலையைப் பறித்து, ஒரு
பொய்த்தவம்
வேம் அவத்தை செலுத்தி, மெய்ப் பொடி அட்டி, வாய்
சகதிக்கு நேர்
ஆம் அவர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 9 |
|
உரை
|
|
|
|
|
3220. |
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு
ஒணாத நல் சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து, இடுக்கே மடுத்து, ஒரு
பொய்த் தவம்
பொங்கு நூல்வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும்
பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன்
நிற்கவே. 10 |
|
உரை
|
|
|
|
|
3221. |
“எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன்
அலேன், திரு
ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே”, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர்
இல்லையே. 11 |
|
உரை
|
|
|
|