41. திருக்கச்சி ஏகம்பம் - திருஇருக்குக்குறள் - கொல்லி
 
3233. “கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா!” என்ன, மருவா, வினையே.     1
உரை
   
3234. மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம்
விதியால் ஏத்த, பதி ஆவாரே.     2
உரை
   
3235. கலி ஆர் கச்சி, மலி ஏகம்பம்
பலியால் போற்ற, நலியா, வினையே.     3
உரை
   
3236. வரம் ஆர் கச்சிப்புரம் ஏகம்பம்
பரவா ஏத்த, விரவா, வினையே.     4
உரை
   
3237. “படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்!” என்ன, அடையா, வினையே.     5
உரை
   
3238. நலம் ஆர் கச்சி, நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த, கலவா, வினையே.     6
உரை
   
3239. கரியின் உரியன், திரு ஏகம்பன்,
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே.     7
உரை
   
3240. இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே.     8
உரை
   
3241. மறையோன், அரியும், அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே!     9
உரை
   
3242. பறியாத் தேரர் நெறி இல் கச்சிச்
செறிகொள் கம்பம் குறுகுவோமே.     10
உரை
   
3243. கொச்சை வேந்தன் கச்சிக் கம்பம்
மெச்சும் சொல்லை, நச்சும், புகழே.     11
உரை