தொடக்கம் |
45. திருஆரூர் - கௌசிகம்
|
|
|
3277. |
அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,
சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம்
எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ? 1 |
|
உரை
|
|
|
|
|
3278. |
கருத்தனே! கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே! உமையாள் ஒருகூறனே!
திருத்தனே! திரு ஆரூர் எம் தீவண்ண!
அருத்த! என், எனை “அஞ்சல்!” என்னாததே? 2 |
|
உரை
|
|
|
|
|
3279. |
மறையன், மா முனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான்,
சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ? 3 |
|
உரை
|
|
|
|
|
3280. |
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து
எல்லி வந்து, இடுகாட்டு எரி ஆடுவான்-
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்;
அல்லல் தீர்த்து, எனை, “அஞ்சல்!” எனும்கொலோ? 4 |
|
உரை
|
|
|
|
|
3281. |
குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி,
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை,
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்-
வருந்தும்போது எனை, “வாடல்!” எனும்கொலோ? 5 |
|
உரை
|
|
|
|
|
3282. |
வார் கொள் மென்முலையாள் ஒரு பாகமா,
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்-
சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்;
ஆர்கணா, எனை, “அஞ்சல்!” எனாததே? 6 |
|
உரை
|
|
|
|
|
3283. |
வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா,
துளைக்கையானை துயர் படப் போர்த்தவன்-
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்;
இளைக்கும்போது, எனை ஏன்று கொளும்கொலோ? 7 |
|
உரை
|
|
|
|
|
3284. |
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக்
கலங்க, கால்விரலால், கடைக் கண்டவன்-
வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்;
அலங்கல் தந்து, எனை, “அஞ்சல்!” எனும்கொலோ? 8 |
|
உரை
|
|
|
|
|
3285. |
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன், பனி மா மதிச் சென்னியான்-
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள் தான்; எனை, “அஞ்சல்!” எனும்கொலோ? 9 |
|
உரை
|
|
|
|
|
3286. |
மாசு மெய்யினர், வண் துவர் ஆடை கொள
காசை போர்க்கும் கலதிகள், சொல் கொளேல்!
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன்தான் எனை ஏன்று கொளும்கொலோ? 10 |
|
உரை
|
|
|
|
|
3287. |
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை,
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே. 11 |
|
உரை
|
|
|
|