தொடக்கம் |
55. திருவான்மியூர் - கௌசிகம்
|
|
|
3384. |
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட
மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 1 |
|
உரை
|
|
|
|
|
3385. |
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி
முடியாய்!
கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்!
செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 2 |
|
உரை
|
|
|
|
|
3386. |
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!
மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 3 |
|
உரை
|
|
|
|
|
3387. |
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய
புண்ணியனே!
மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே!
தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில்
அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 4 |
|
உரை
|
|
|
|
|
3388. |
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில்
சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 5 |
|
உரை
|
|
|
|
|
3389. |
நீதீ! நின்னை அல்லால், நெறியாதும் நினைந்து
அறியேன்;
ஓதீ, நால்மறைகள்! மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ! சேதம் இல்லாத் திரு வான்மியூர் உறையும்
ஆதீ! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 6 |
|
உரை
|
|
|
|
|
3390. |
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை
போல வரும்
கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்!
தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 7 |
|
உரை
|
|
|
|
|
3391. |
பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை
மேயவனும்,
நெறி ஆர் நீள் கழல், மேல்முடி, காண்பு அரிது ஆயவனே!
செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
அறிவே! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 9 |
|
உரை
|
|
|
|
|
3392. |
குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர்,
என்று இவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்!
திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
அண்டா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. 10 |
|
உரை
|
|
|
|
|
3393. |
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே. 11 |
|
உரை
|
|
|
|