தொடக்கம் |
57. திருஒற்றியூர் - பஞ்சமம்
|
|
|
3405. |
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன்,
வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே. 1 |
|
உரை
|
|
|
|
|
3406. |
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,
ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.
2 |
|
உரை
|
|
|
|
|
3407. |
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு,
அனல், காலும், ஆகி;
அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 3 |
|
உரை
|
|
|
|
|
3408. |
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை
அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 4 |
|
உரை
|
|
|
|
|
3409. |
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து,
நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே,
அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு,
முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3410. |
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும்
ஒலிப்ப,
சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும்
சோமனையும்;
அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு
இலங்க,
உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 6 |
|
உரை
|
|
|
|
|
3411. |
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு
நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,
பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல்
அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 7 |
|
உரை
|
|
|
|
|
3412. |
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்;
கருமான் உரி-தோல்
சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க,
தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு
மால்வரைக்கீழ்
ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே. 8 |
|
உரை
|
|
|
|
|
3413. |
திருவின் ஆர் போதினாலும் திருமாலும்,
ஒர் தெய்வம் முன்னி,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,
பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 9 |
|
உரை
|
|
|
|
|
3414. |
தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள்
போர்த்து
உழல்வார்
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன் மின்! ஏழ்
உலகும்
ஓகை தந்து ஆள வல்லான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. 10 |
|
உரை
|
|
|
|
|
3415. |
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை
ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு
எளிதே. 11 |
|
உரை
|
|
|
|