58. திருச்சாத்தமங்கை - பஞ்சமம்
 
3416. திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி
                                                           வைத்தீர்
இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது
                                                             ஒன்றே?
பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!      1
உரை
   
3417. பொடிதனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த,
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே?
கடி-மணம் மல்கி, நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ, அயவந்தி அமர்ந்தவனே!      2
உரை
   
3418. நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து, ஏறு அது ஏறி,
மான் அன நோக்கி தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே?
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆன் நலம் தோய்ந்த எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!   3
உரை
   
3419. மற்ற வில் மால்வரையா மதில் எய்து, வெண் நீறு பூசி,
புற்று அரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்பதுவே?
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த, அயவந்தி அமர்ந்தவனே!      4
உரை
   
3420. வெந்த வெண் நீறு பூசி, விடை ஏறிய வேத கீதன்,
பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே?
சந்தம் ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும் சாத்தமங்கை,
அந்தம் ஆம் ஆதி ஆகி, அயவந்தி அமர்ந்தவனே!      5
உரை
   
3421. வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது
                                                                   ஆகி,
சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது
                                                              ஒன்றே?
சாதியால் மிக்க சீரால்-தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!    6
உரை
   
3422. இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி,
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது
                                                             ஒன்றே?
சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும்
                                                   சாத்தமங்கை,
அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே!      7
உரை
   
3423. பண் உலாம் பாடல் வீணை பயில்வான், ஓர் பரமயோகி,
விண் உலாம் மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே?
தண் நிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!      8
உரை
   
3424. பேர் எழில்-தோள் அரக்கன் வலி செற்றதும், பெண் ஓர்பாகம்
ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும், ஏற்பது ஒன்றே?
கார் எழில் வண்ணனோடு, கனகம்(ம்), அனையானும், காணா
ஆர் அழல்வண்ண! மங்கை அயவந்தி அமர்ந்தவனே!      9
உரை
   
3425. கங்கை ஓர் வார்சடைமேல் அடைய, புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற(ம்) மதிதான் சொல்லல் ஆவது
                                                                ஒன்றே?
சங்கை இல்லா மறையோர் அவர்தாம் தொழு சாத்தமங்கை,
அங்கையில் சென்னி வைத்தாய்! அயவந்தி அமர்ந்தவனே!  10
உரை
   
3426. மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், “மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர்” என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.  11
உரை