தொடக்கம் |
59. திருக்குடமூக்கு - பஞ்சமம்
|
|
|
3427. |
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று
அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே. 1 |
|
உரை
|
|
|
|
|
3428. |
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து,
அயலே
பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல
கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா,
ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே. 2 |
|
உரை
|
|
|
|
|
3429. |
மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட
அன்னம் மல்கும்,
பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில்
வாய்,
குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே. 3 |
|
உரை
|
|
|
|
|
3430. |
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து,
உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு
ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே. 4 |
|
உரை
|
|
|
|
|
3431. |
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர்
வாரணத்தைப்
பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்;
கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா,
இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே. 5 |
|
உரை
|
|
|
|
|
3432. |
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று
அயலே,
தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம்
இறையே. 6 |
|
உரை
|
|
|
|
|
3433. |
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்;
எழில் வையம் உய்யச்
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்;
குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா,
இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே. 7 |
|
உரை
|
|
|
|
|
3434. |
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்)
உடலைப்
படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா,
இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே. 8 |
|
உரை
|
|
|
|
|
3435. |
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே. 9 |
|
உரை
|
|
|
|
|
3436. |
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு
அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான்,
கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா,
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம்
இறையே. 10 |
|
உரை
|
|
|
|
|
3437. |
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு
நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே. 11 |
|
உரை
|
|
|
|