தொடக்கம் |
61. திருவெண்டுறை - பஞ்சமம்
|
|
|
3449. |
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. 1 |
|
உரை
|
|
|
|
|
3450. |
காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய்
வார்கழலான்;
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்;
மாலை மதியொடு, நீர், அரவம், புனை வார்சடையான்;
வேல் அன கண்ணியொடும், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே. 2 |
|
உரை
|
|
|
|
|
3451. |
படை நவில் வெண்மழுவான், பல பூதப்படை
உடையான்,
கடை நவில் மும்மதிலும்(ம்) எரியூட்டிய கண் நுதலான்,
உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான், கடிய
விடை நவிலும் கொடியான், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே. 3 |
|
உரை
|
|
|
|
|
3452. |
பண் அமர் வீணையினான், பரவிப் பணி தொண்டர்கள்
தம்
எண் அமர் சிந்தையினான், இமையோர்க்கும் அறிவு அரியான்,
பெண் அமர் கூறு உடையான், பிரமன் தலையில் பலியான்,
விண்ணவர் தம் பெருமான், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே. 4 |
|
உரை
|
|
|
|
|
3453. |
பார் இயலும் பலியான்; படி யார்க்கும்
அறிவு அரியான்;
சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்;
போர் இயலும் புரம் மூன்று உடன், பொன் மலையே சிலையா,
வீரியம் நின்று செய்தான்; விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே. 5 |
|
உரை
|
|
|
|
|
3454. |
ஊழிகள் ஆய், உலகு ஆய், ஒருவர்க்கும் உணர்வு
அரியான்;
போழ் இள வெண்மதியும் புனலும்(ம்) அணி புன் சடையான்;
யாழின் மொழி உமையாள் வெருவ(வ்), எழில் வெண் மருப்பின்
வேழம் உரித்த பிரான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. 6 |
|
உரை
|
|
|
|
|
3455. |
கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப்
பொன்ற முனிந்த பிரான், பொடி ஆடிய மேனியினான்,
சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான், புலன்கள்
வென்றவன், எம் இறைவன், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே.
7 |
|
உரை
|
|
|
|
|
3456. |
கரம் இரு-பத்தினாலும் கடுவெஞ்சினம் ஆய்
எடுத்த
சிரம் ஒருபத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான்,
பரவ வல்லார் வினைகள் அறுப்பான், ஒருபாகமும் பெண்
விரவிய வேடத்தினான், விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. 8 |
|
உரை
|
|
|
|
|
3457. |
கோல மலர் அயனும், குளிர் கொண்டல் நிறத்தவனும்,
சீலம் அறிவு அரிது ஆய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்;
மூலம் அது ஆகி நின்றான்; முதிர் புன்சடை வெண்பிறையான்;
வேலைவிடமிடற்றான்; விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. 9 |
|
உரை
|
|
|
|
|
3458. |
நக்க உரு ஆயவரும், துவர் ஆடை நயந்து உடை
ஆம்
பொக்கர்கள், தம் உரைகள்(ள்) அவை பொய் என, எம்
இறைவன்,
திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான், கனகம்
மிக்கு உயர் சோதி அவன், விரும்பும்(ம்) இடம்
வெண்டுறையே. 10 |
|
உரை
|
|
|
|
|
3459. |
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை,
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்-
எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று
அறுமே. 11 |
|
உரை
|
|
|
|