தொடக்கம் |
65. திருக்கச்சி நெறிக்காரைக்காடு - பஞ்சமம்
|
|
|
3492. |
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம்
கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே. 1 |
|
உரை
|
|
|
|
|
3493. |
கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர்,
உடைதலை கொண்டு
ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி-அதளர்
தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய்,
நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே. 2 |
|
உரை
|
|
|
|
|
3494. |
கூறு அணிந்தார், கொடியிடையை; குளிர்சடைமேல்
இளமதியோடு
ஆறு அணிந்தார்; ஆடு அரவம் பூண்டு உகந்தார்; ஆள்
வெள்ளை
ஏறு அணிந்தார், கொடி அதன்மேல்; என்பு அணிந்தார்,
வரைமார்பில்,
நீறு அணிந்தார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 3 |
|
உரை
|
|
|
|
|
3495. |
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ,
பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி,
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும்
நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 4 |
|
உரை
|
|
|
|
|
3496. |
அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம்
உரைத்த அருள
குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி,
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3497. |
பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள்
பணிந்து
இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து
அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 6 |
|
உரை
|
|
|
|
|
3498. |
புற்று இடை வாள் அரவினொடு, புனை கொன்றை,
மத மத்தம்,
எற்று ஒழியா அலைபுனலோடு, இளமதியம், ஏந்து சடைப்
பெற்று உடையார்; ஒருபாகம் பெண் உடையார்; கண் அமரும்
நெற்றியினார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 7 |
|
உரை
|
|
|
|
|
3499. |
ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை
எழில் வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார்
ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும்
நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 8 |
|
உரை
|
|
|
|
|
3500. |
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில்
பலி கொள்வர்
மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய்
நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 9 |
|
உரை
|
|
|
|
|
3501. |
குண்டாடிச் சமண் படுவார், கூறை தனை மெய்
போர்த்து
மிண்டாடித் திரிதருவார், உரைப்பனகள் மெய் அல்ல;
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே. 10 |
|
உரை
|
|
|
|
|
3502. |
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு
உறையும்
பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,
தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே. 11 |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next