தொடக்கம் |
66. திருவேட்டக்குடி - பஞ்சமம்
|
|
|
3503. |
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி
சடைமேல் வரி
அரவம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச்
சுடர்ப்
பவளம்
தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்
குடியாரே.
1 |
|
உரை
|
|
|
|
|
3504. |
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப்
பயின்று எங்கும்
காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழிக் கானல்
போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து, அழகு ஆர்
தீ-எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே. 2 |
|
உரை
|
|
|
|
|
3505. |
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய
ஆன் நிரையின்
பால்
பாத்திரமா ஆட்டுதலும், பரஞ்சோதி பரிந்து அருளி
“ஆத்தம்” என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று
உரைத்த,
தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே. 3 |
|
உரை
|
|
|
|
|
3506. |
கலவம் சேர் கழிக் கானல் கதிர் முத்தம்
கலந்து எங்கும்
அலவன் சேர் அணை வாரிக் கொணர்ந்து எறியும் அகன்
துறைவாய்
நிலவு அம் சேர் நுண் இடைய நேரிழையாள் அவளோடும்
திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டக்குடியாரே. 4 |
|
உரை
|
|
|
|
|
3507. |
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு அரவு
உழல,
செங்கண் மால் கடைய, எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி;
அங்கம் நால்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3508. |
நாவாய பிறைச் சென்னி, நலம் திகழும்
இலங்கு இப்பி,
கோவாத நித்திலங்கள், கொணர்ந்து எறியும் குளிர்கானல்
ஏ ஆரும் வெஞ்சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திரு வேட்டக்குடியாரே. 6 |
|
உரை
|
|
|
|
|
3509. |
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல்
வெண்கு
கான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்
மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்
தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே. 7 |
|
உரை
|
|
|
|
|
3510. |
துறை உலவு கடல் ஓதம் சுரிசங்கம் இடறிப்
போய்,
நறை உலவும் பொழில் புன்னை நன்நீழல் கீழ் அமரும்
இறை பயிலும் இராவணன் தன் தலை பத்தும் இருபது தோள
திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே. 8 |
|
உரை
|
|
|
|
|
3511. |
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர்
ஏற்றானும்,
இருவரும் ஆய் அளப்பு அரிய எரி உரு ஆய் நீண்ட பிரான்;
வருபுனலின் மணி உந்தி மறிதிரை ஆர் சுடர்ப் பவளத்-
திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே. 9 |
|
உரை
|
|
|
|
|
3512. |
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும், இடும்
போர்வைச்
சாக்கியரும்,
புகழ்ந்து உரையாப் பாவிகள் சொல் கொள்ளேன்மின், பொருள்
என்ன!
நிகழ்ந்து இலங்கு வெண்மணலின் நிறைத் துண்டப்
பிறைக்கற்றை
திகழ்ந்து இலங்கு செஞ்சடையார் திரு வேட்டக்குடியாரே. 10 |
|
உரை
|
|
|
|
|
3513. |
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை,
தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார்,
போய்,
உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து
இருப்பாரே. 11 |
|
உரை
|
|
|
|