68. திருக்கயிலாயம் - திருவிராகம் - சாதாரி
 
3526. வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும்
                                                              மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி,
                                                               வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி,
                                                     வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே. 1
உரை
   
3527. புற்று அரவு பற்றிய கை, நெற்றியது மற்று ஒரு கண், ஒற்றை
                                                          விடையன்,
செற்றது எயில், உற்றது உமை, அற்றவர்கள் நல்-துணைவன்,
                                                     உற்ற நகர்தான்-
“சுற்றும் மணி பெற்றது ஒளி; செற்றமொடு குற்றம் இலது;
                                        எற்று?” என வினாய்,
கற்றவர்கள் சொல்-தொகையின் முற்றும் ஒளி பெற்ற
                                          கயிலாயமலையே.      2
உரை
   
3528. சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை
                                            கொங்குமலர் தூய்,
“எங்கள் வினை, சங்கை அவை, இங்கு அகல!” அங்கம்
                                         மொழி எங்கும் உள ஆய்,
திங்கள் இருள் நொங்க, ஒளி விங்கி, மிளிர் தொங்கலொடு
                                                      தங்க, அயலே
கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு
                                      கயிலாயமலையே.      3
உரை
   
3529. முடிய சடை, பிடியது ஒரு வடிய மழு உடையர், செடி உடைய
                                                              தலையில்
வெடிய வினை கொடியர் கெட, இடு சில்பலி நொடிய மகிழ்
                                               அடிகள் இடம் ஆம்
கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும்
                                                இடியின் அதிர,
கடிய குரல் நெடிய முகில் மடிய, அதர் அடி கொள்
                                        கயிலாயமலையே.      4
உரை
   
3530. குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ, விடம் கிளர் படம்
                                                        கொள் அரவம்
மடங்கு ஒளி படர்ந்திட, நடம் தரு விடங்கனது இடம்
                                       தண்முகில் போய்த்
தடங்கடல் தொடர்ந்து, உடன் நுடங்குவ இடம் கொள
                                         மிடைந்த குரலால்,
கடுங் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு
                                      கயிலாயமலையே.      5
உரை
   
3531. ஏதம் இல பூதமொடு, கோதை துணை ஆதி முதல், வேத
                                                          விகிர்தன்,
கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன், நகர்தான்-
தாது பொதி போது விட, ஊது சிறை மீது துளி கூதல் நலிய,
காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது
                             கயிலாயமலையே.             6
உரை
   
3532. சென்று பல வென்று உலவு புன்தலையர் துன்றலொடும் ஒன்றி,
                                                                  உடனே-
நின்று, அமரர் என்றும் இறைவன் தன் அடி சென்று
                                      பணிகின்ற நகர்தான்-
துன்று மலர் பொன்திகழ் செய் கொன்றை விரை தென்றலொடு
                                                             சென்று கமழ,
கன்று, பிடி, துன்று களிறு, என்று இவை முன் நின்ற
                                       கயிலாயமலையே.      7
உரை
   
3533. மருப்பு இடை நெருப்பு எழு தருக்கொடு செருச் செய்த பருத்த
                                                                களிறின்
பொருப்பு இடை விருப்பு உற இருக்கையை ஒருக்கு உடன்
                                               அரக்கன் உணராது,
ஒருத்தியை வெருக்கு உற வெருட்டலும், நெருக்கு என
                                                நிருத்த விரலால்,
கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய
                                                         மலையே.    8
உரை
   
3534. பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை
                                                         உடையன்,
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு
                                                   இல் நகர்தான்-
பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை
                                                         அதனால்,
கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு
                             கயிலாயமலையே.             9
உரை
   
3535. அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை,
                                                       துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர்
                                                           இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு
                                             உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத
                                      கயிலாயமலையே.        10
உரை
   
3536. அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி,
                                                               அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த
                                                              புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம்
                                                               எளிதே. 11
உரை