85. திருவீழிமிழலை - திருவிராகம் - சாதாரி
 
3712. மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.      1
உரை
   
3713. எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.      2
உரை
   
3714. மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே.      3
உரை
   
3715. செவ் அழல் என நனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலா
முவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில்
வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே.                                                 4
உரை
   
3716. பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.      5
உரை
   
3717. பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே.                                                  6
உரை
   
3718. அக்கினொடு, அரவு, அரை அணி திகழ் ஒளியது
                                             ஒர் ஆமை, பூண்டு
இக்கு உக, மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்;
கொக்கரை, குழல், முழ, விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
மிக்கவர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.                                                7
உரை
   
3719. பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.                                                 8
உரை
   
3720. நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி
                                                                 திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.                                                9
உரை
   
3721. இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு
                                                                    இலர்
மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்
விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.                                              10
உரை
   
3722. உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.                                                 11
உரை